பண்பாடு



தன்னலத்தை புரக்கணித்து பொது நலத்தைப் பேண் அன்பு அருள், வாய்மை, தூய்மை, துப்புரவு, கண்ணோட்டம், சைகை, நாணம் முதலிய அனைத்து பண்புகளை அடிப்படையாக வைத்து தன்னுடைய சிறு சமூக எல்லைக்கோட்டைக் கடந்து உலக உறவாக வளர்வதே மனித குலத்தில் சிறந்த பண்பாகும்.
மனிதனுடைய அகவளர்ச்சியை பண்பாடு என்றும் புறவளர்ச்சியை நாகரீகம் என்றும் குறிப்பிடுகின்றனர். ஆங்கிலேய சொல்லான civilization என்பது நகர்புறத்துத் திருந்திய வாழ்வையே குறிக்கின்றது என அறிஞர் பாவாணர் விளக்குகின்றார்
லத்தீன் சொல்லான Civis, Citizen, Civils பின்பு ஆங்கிலத்தில் Civilize என்பதாயிற்று. நகரமே நாகரீக பிறப்பிடமாக தெரிகிறது. உலக பெரு நாகரிகங்கள் அனைத்தும் பேராற்றங்கரையிலேயே உருவாகின. நகர் +அகம்= நகரிகம்>நாகரீகம் என்றானது என்று அறிஞர் பாவாணர் குறிப்பிடுகின்றார்.

பக்குவப்பட்ட மனிதனை பண்பட்ட மனிதன், பண்பட்ட உள்ளமுடையோர்  என்போம். புலாVஆற்Kஆல் மக்கள் உள்ளமென்றும் நிலத்தை தம் கவிதையால் கொண்டு உழுது அறிவு விதைகளைத் தூவிப் பண்படுத்துகிண்ரார். வாழ்வின் பல போக்குகள் அமைந்து பலவேறு நிலைகளையும் பண்பாடு என்று குறிக்கின்றோம். உடலைப்பற்றிய நன்னிலை, மனத்தைப்பற்றிய தூய்மைநிலை, பேச்சின் இனிமை இவை எல்லாம் பண்பாட்டில் அடங்கும்.

மக்கள் வரலாற்றில் அவர்கள் இயற்றிக் கொண்ட கருவிகள் சமூகம், பழக்கம், நம்பிக்கை, சமயம் முதலியவற்றைப் பண்பாடு என்று குறிப்பிடுகின்றனர்.

ஒருவன் தன் குணநலன்களை நிரப்புவதிலும் தன்னைச் சூழ்ந்த சமூகத்தின் நலனைப் பேணுவதிலும் பேராவல் கொண்டிருக்கும் நிலை பண்பாடாகும்.-மாத்யூ ஆர்னால்டு
ஓர் இனத்தின் பண்பாடு அதன் இலக்கியம் நடையுடை, மொழி கலைகள் குறிக்கோள், சமயகொள்கை, அரசிற் கொள்கை அரசியல் வரலாறு சமுதாய் நிலை பெண்களின் நிலை, கல்வி நிலையம் மூலம் விளங்குகின்றது.Culture

Comments

Popular posts from this blog

தமிழக நாட்டுப்புற கலைகள்

FORMATS OF RADIO PROGRAMMES

ROLE OF ADVERTISING IN MARKETING MIX