Socrates

"The only true wisdom is in knowing you know nothing." 

Socrates

"To find yourself, think for yourself."

Nelson Mandela

"Education is the most powerful weapon which you can use to change the world."

Jim Rohn

"Success is nothing more than a few simple disciplines, practiced every day." 

Buddha

"The mind is everything. What you think, you become." 

Showing posts with label ஊடகக் கலைகள். Show all posts
Showing posts with label ஊடகக் கலைகள். Show all posts

Thursday, 6 February 2014

ஆவணப்படம்


ஓவியக்கலை, கட்டடக்கலை, நாடகக்கலை, நாட்டியக்கலை, இசைக்கலை, இலக்கிய க்கலை, போன்றவற்றிற்கு அடுத்ததாக புதிதாகவும் மேலே கண்ட எல்லாக் கலைகளையும் உள்ளடக்கியதாகவும் தோன்றிய நவீனக் கலைதான் திரைப்படக்கலை. எடிசன் கண்டுபிடித்த திரைப்படக் கருவியைக் கொண்டு 1895 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் நாள், பாரிஸில் உள்ள கிரேண்ட் கபே என்ற இடத்தில் லூமியர் சகோதரர்களால் இயக்கப்பட்ட 'புகைவண்டியின் வருகை' என்ற படம் காட்டப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னையில் மத்திய தலைமை புகைவண்டி நிலையம் அருகில் உள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில் எட்வர்ட்ஸ் என்ற ஆங்கிலேயரால் திரையிடப்பட்டது.

1916 ஆம் ஆண்டு நடராஜ முதலியார் என்பவர் 'கேசவதம்' என்ற தென்னிந்தியாவின் முதல் மௌனப்படத்தை எடுத்து வெளியிட்டார். 1916 முதல் 1932 வரை தென்னிந்தியாவில் 123 மௌனப்படங்கள் தயாரிக்கப்பட்டதாக தியோடர் பாஸ்கரன் தெரிவிக்கிறார்.
1931 ஆம் ஆண்டு தமிழில் முதல் பேசும் படமாக 'காளிதாஸ்' வெளிவந்தது.



தஞ்சையைச் சேர்ந்த மருதப்ப மூப்பனார் என்பவர் சென்னை விமான நிலையத்தில் விமானம் வந்திறங்குவது, மற்றும் 1911இல் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டு விழாவையும் படமெடுத்தார். சென்னை வேப்பேரியில் வாழ்ந்த ஜோசப் டேவிட் என்ற தமிழர் 1920,21களில் 'மகாபலிபுரத்து சிற்பங்கள்' 'நெல்லின் வளர்ச்சி' முதலிய படங்களை எடுத்து வெளிநாடுகளிலும் விற்றுள்ளார்.

கெயிட்டி திரையரங்கு முதலாளியான வெங்கையாவின் மகன், ரகுபதி பிரகாசாவும் சில ஆவணப் படங்களை எடுத்துள்ளார். மௌனப்பட உலகில் புகழ்பெற்றவரான சிவகங்கை நாராயணனும் அரசாங்கத்தின் சுகாதாரத்துறைக்காக 'தாய்மையும் குழந்தையும் பராமரிப்பும்' 'பாலியல் நோய்கள்' முதலிய ஆவணப்படங்களைத் தயாரித்துள்ளார்.

ஆவணப்படம் பெயர் வந்த வரலாறு
' 'டாக்குமென்டரி பிலிம்' (Documentary Film) என்ற என்பதற்கு இணையாக ஆவணப்படம் என்று தமிழில் அழைக்கப்படுகிறது. இதற்கு முன் இச்சொல்லை தகவல்படம், விவரணப்படம், செய்திப்படம், என்றெல்லாம் அழைத்தார்கள்.

ஆவணப்படத்தின் முன்னோடியான ராபர்ட் ஃப்ளஹர்டி 1926ஆம் ஆண்டு 'மோனா' என்ற படத்தை எடுத்தார். இலண்டன் இயக்குனரான ஜான் கிரியர்ஸன், இப்படத்தை விமர்சனம் செய்யும் போது 'டாக்குமென்டரி' என்ற சொல்லை பயன்படுத்தினார். அதுமுதல் இச்சொல் புழக்கத்திற்கு வந்தது. ஏ.கே.செட்டியார் தனது கட்டுரை ஒன்றில் (1943) டாக்குமென்டரி படங்களை 'வாழ்க்கைச் சித்திரப் படம்' என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். இயக்குனர் கே.சுப்பிரமணியம் 'சாசனப்படம்' என்று குறிப்பிடுகிறார். கல்வெட்டுகள், மற்றும் பெரியபுராணம் முதலியவற்றில் ஆவணம், ஆவணக்களரி, போன்ற நல்ல தமிழ் சொற்கள் இடம் பெற்றுள்ளதால் அதனையட்டி 'ஆவணப்படம்' என்ற நல்ல பெயரை சூட்டியுள்ளனர்.

ஆவணப்படத்தின் இலக்கணம்
"யதார்த்த நிகழ்வை படைப்பாளுமையுடன் வெளிப்படுத்துவதே ஆவணப்படம்" என்கிறார் கிரியர்ஸன். கதை தழுவாமல் யதார்த்தத்தை பிரதிபலிப்பவைகளே ஆவணப் படம.

ஆவணப்படத்தில் இருபத்தைந்து வகைகள் இருக்கின்றன. குறிப்பிடத்தக்கவை: செய்திப்படங்கள், வனவிலங்குகள், கல்வி சார்ந்தவை, மருத்துவம், இனவரலாறு, கட்டிடங்கள், வேளாண்மை, சூழலியல், பெண்ணியம், பறவையியல், மலையேறுதல், மெய்யியல், புராணீகம், அறிவியல் மற்றும் செய்தித் தொடர்பூடகங்கள், சுற்றுலா, வரலாறு நினைவிடங்கள், திருவிழாக்கள் போன்றவை.
இவ்வகைப் படங்களுக்கு கால அளவில்லை; முழு நீளப் படங்கள் அளவு இவையும் தயாரிக்கப்படுகின்றன.

குறும்படத்துடன் ஒப்பிடும்போது ஆவணப்படங்கள் குறைவாகவே எடுக்கப்படுகின்றன. இதன் விகிதாசாரம் 3:1 ஆகவே இருக்கிறது.

ஆவணப்படத்தின் சிறப்பு இயல்புகள்
திரைப்படம் என்பது முழுநீளப் படமாக (கதைப் படமாக) தொடங்குவதற்கு முன்னால் ஆவணப்படமாகவே தனது பயணத்தைத் தொடங்கியது. எதார்த்தத்தை அப்படியே பதிவு செய்வது அதன் குண இயல்பாக இருந்ததால் திரைப்படங்களில் எதார்த்தவாதம் இருக்க வேண்டியதின் அவசியத்தை ஆவணப் படங்களே உணர்த்தின. ஆவணப் படத்தின் கூறுகள் பலவற்றை முழுநீளத் திரைப்படங்களில் காணலாம்.

தமிழகத்தின் கலை, வரலாறு, பண்பாடு, தலைவர்கள் முதலியவர்களை ஆவணப் படுத்துவதன் மூலம் வருங்கால சந்ததிகளுக்கு பெரும் பயன் செய்கின்றனர். பழைய நாட்களில் வரலாற்றை கல்வெட்டு, செப்புப்பட்டயம், சுவடி, ஓவியம், சிற்பம், கட்டடங்ளில், புத்தகங்களில் பதிவு செய்தது போல இன்றைய மனிதர் நாகரீகங்களை ஊடகக் கருவிகளின் வளர்ச்சியை ஒட்டி நாம் ஆவணப் படங்களில் பதிவு செய்ய வேண்டிய கடப்பாடு இருக்கிறது.




இந்திய அரசு பிரிட்டிஷாரின் காலனியாக இருந்ததால் தொடக்காலத்தில் எடுக்கப்பட்ட பல ஆவணப்படங்கள் அவர்களது ஆவணக் காப்பகத்தில் இருக்கின்றன. இதுபோல பிரெஞ்சு காலனியாக இருந்த புதுவை, காரைக்கால் பகுதிகளில் பிரெஞ்சுகாரர்கள் எடுத்த பல பதிவுகள் பாரீஸ் ஆவணக் காப்பகத்தில் உள்ளது.

சென்ற நூற்றாண்டில் தமிழர்கள் கூலிகளாக கொண்டு செல்லப்பட்ட நாடுகளான பர்மா, சிங்கபூர், மலேசியா, ஃபிஜி தீவு, தென்னாப்பிரிக்கா, டிரினிடாட், சீசெல்ஸ் தீவு, மொரீஷீயஸ் முதலிய நாடுகளுக்கு செல்லுகிற வாய்ப்புள்ள தமிழர்கள் அங்கே உள்ள தமிழர்களின் வரலாற்றுத் தடயங்களை தேடி எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இதே போன்று உலகளவில் பயணிகளாக வந்தவர்கள் தமிழக சிற்பங்கள் கோவில்கள் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வை பதிவு செய்த ஆவணப் படங்களை முறைப்படி தேட வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். ஏனெனில் தமிழகத்தைப் பற்றி எடுக்கப்பட்ட தொடக்க கால ஆவணப் படங்கள் ஒன்று கூட இல்லை.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆவணப்படங்கள்
1. மகாத்மா காந்தி - ஏ.கே.செட்டியார் - 1940
2. ஐ.என்.ஏ - சொர்ணவேல்
3. சுப்பிரமணிய பாரதியார் - அம்ஷன் குமார் - 1999
4. மெட்ராஸ் ஐ - அருண்மொழி - 1995
5. மறைந்து வரும் மரபுகள் - இந்து வர்மா
6. த புரொஃபைல் ஆஃப் டோயன் - பெண்ணேஸ்வரன்
7. தமிழ் சினிமாவின் கதை - ஷண்முகநாதன் மற்றும் சந்தான கிருஷ்ணன்
8. நீ எங்கே - ரமணி
9. நதியின் மரணம் - ஆர்.ஆர். சீனிவாசன்
10. இந்திரா பார்த்தசாரதி என்னும் கலைஞன் - ரவி சுப்பிரமணியம்
11. கே.ஆர்.அம்பிகா - அம்பை
12. தேவதைகள் - லீணா மணிமேகலை
13. ஜல்லிக்கட்டு - ராஜாங்கம்
14. பேசா மொழி - செந்தமிழன்
15. தீவிரவாதிகள் - அமுதன்
16. மரண கானா விஜி - ராம்
17. தளிர் ஒன்று சருகானது - சுஷ்மா கிருஷ்ணமூர்த்தி
18. எரியும் நினைவுகள் - சோமிதரன்
19. ராமையாவின் குடிசை - பாரதி கிருஷ்ணகுமார்
20. உங்களில் ஒருத்தி - ரேவதி
21. நொய்யல் தொலைந்த தடம் - பாலமுருகன்
22. இரவுகள் உடையும் - மாதவராஜ்
23. அகவிழி - பி.என்.எஸ். பாண்டியன்
24. இடைச்சேவல் - புதுவை இளவேனில்
25. அண்ணா எனும் பெருங்கடலில் சிறுதுளி - கோவி. லெனின்
26. நாடக இராமானுஜம் . அண்ணாமலை

நன்றி- தமிழ் ஸ்டுடியோ

ஆவணப்படம் 

Saturday, 25 January 2014

பண்பாடு



தன்னலத்தை புரக்கணித்து பொது நலத்தைப் பேண் அன்பு அருள், வாய்மை, தூய்மை, துப்புரவு, கண்ணோட்டம், சைகை, நாணம் முதலிய அனைத்து பண்புகளை அடிப்படையாக வைத்து தன்னுடைய சிறு சமூக எல்லைக்கோட்டைக் கடந்து உலக உறவாக வளர்வதே மனித குலத்தில் சிறந்த பண்பாகும்.
மனிதனுடைய அகவளர்ச்சியை பண்பாடு என்றும் புறவளர்ச்சியை நாகரீகம் என்றும் குறிப்பிடுகின்றனர். ஆங்கிலேய சொல்லான civilization என்பது நகர்புறத்துத் திருந்திய வாழ்வையே குறிக்கின்றது என அறிஞர் பாவாணர் விளக்குகின்றார்
லத்தீன் சொல்லான Civis, Citizen, Civils பின்பு ஆங்கிலத்தில் Civilize என்பதாயிற்று. நகரமே நாகரீக பிறப்பிடமாக தெரிகிறது. உலக பெரு நாகரிகங்கள் அனைத்தும் பேராற்றங்கரையிலேயே உருவாகின. நகர் +அகம்= நகரிகம்>நாகரீகம் என்றானது என்று அறிஞர் பாவாணர் குறிப்பிடுகின்றார்.

பக்குவப்பட்ட மனிதனை பண்பட்ட மனிதன், பண்பட்ட உள்ளமுடையோர்  என்போம். புலாVஆற்Kஆல் மக்கள் உள்ளமென்றும் நிலத்தை தம் கவிதையால் கொண்டு உழுது அறிவு விதைகளைத் தூவிப் பண்படுத்துகிண்ரார். வாழ்வின் பல போக்குகள் அமைந்து பலவேறு நிலைகளையும் பண்பாடு என்று குறிக்கின்றோம். உடலைப்பற்றிய நன்னிலை, மனத்தைப்பற்றிய தூய்மைநிலை, பேச்சின் இனிமை இவை எல்லாம் பண்பாட்டில் அடங்கும்.

மக்கள் வரலாற்றில் அவர்கள் இயற்றிக் கொண்ட கருவிகள் சமூகம், பழக்கம், நம்பிக்கை, சமயம் முதலியவற்றைப் பண்பாடு என்று குறிப்பிடுகின்றனர்.

ஒருவன் தன் குணநலன்களை நிரப்புவதிலும் தன்னைச் சூழ்ந்த சமூகத்தின் நலனைப் பேணுவதிலும் பேராவல் கொண்டிருக்கும் நிலை பண்பாடாகும்.-மாத்யூ ஆர்னால்டு
ஓர் இனத்தின் பண்பாடு அதன் இலக்கியம் நடையுடை, மொழி கலைகள் குறிக்கோள், சமயகொள்கை, அரசிற் கொள்கை அரசியல் வரலாறு சமுதாய் நிலை பெண்களின் நிலை, கல்வி நிலையம் மூலம் விளங்குகின்றது.Culture

Wednesday, 15 January 2014

தமிழக நாட்டுப்புற கலைகள்

ஒரு நாட்டின் கலை மற்றும் கலாச்சாரம் அச்சமூகத்தினைப் பிரதிபலிக்கும் சிறந்த கருவியாகும். கலை என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றித் தகவல் ஊடகமாகவும், கலாச்சாரப் பாலமாகவும் திகழ்கின்றது. கலை என்பது மன உணர்வுகளின் வெளிப்பாடு. குறிப்பாக நாட்டுப்புறக் கலைகள் நமது மண்ணோடு, நம்மோடு தொடர்புடையவை. நமது பாரம்பரியத்தையும் அடி ஆழத்து வேர்களையும் பிரதிபலிப்பவை. கலை, சமூக வளர்ச்சிக்கும், மன எழுச்சிக்கும் சிறந்த கருவி.பதிவு

நமது முன்னோர்களின் நம்பிக்கைகள், எண்ணங்கள், சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், ஆகியவற்றை நாட்டுப்புறக் கலைகள் மூலம் அறியமுடிகிறது. இக்கலைகளே சமுதாயத்தின் ஆவணமாகத் திகழ்கின்றன. இக்கிராமியக் கலைகளே, தகவல் பரப்பும் ஊடகமாகவும் பழக்க வழக்கப் பண்பாட்டுப் பெட்டகமாகவும் திகழ்ந்துள்ளன.

இன்று தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியான தகவல் தொடர்பிற்கும் பொழுது போக்கிற்கும் பல்வேறு ஊடகங்கள் உருவாகி வருகின்றன. இம்மாறுதல் இயற்கையானதே.

நமது இந்தியக் கிராமங்கள் ஒவ்வொன்றும் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றினைக் கொண்டுள்ளன. இவை தனக்கே உரித்தான தனித்தன்மைகளையும் சிறப்புகளையும் கொண்டவை. வாழ்ந்து பெற்ற அனுபவங்களின் கலவையாக சில கலைகளை கிராமங்கள் நமக்கு அளித்துள்ளன. அவை பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி மன வளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் வளம் சேர்ப்பனவாகும். ஒருங்கிணைந்த சமூக முன்னேற்றத்திற்கு உரம் சேர்ப்பதாகவும் அமைந்திருப்பதனை அறியமுடிகிறது.
இந்திய நாட்டுப்புறக் கலைகளில் தமிழக நாட்டுப்புறக் கலைகள் பல்வேறு வகைகளில் சிறப்பும் தனித்தன்மையும் கொண்டவை. இவைகளை

நிகழ்த்துக் கலைகள் (Preforming Arts)
நிகழ்த்தாத கலைகள் (Non-Performing Arts)
பொருட்கலை (material Arts)

என நாட்டுப்புறவியல் வல்லுனர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

பொதுவாக தமிழக நாட்டுப்புற கலைகள்:-

1.
ஒயிலாட்டம் 2. ஆலியாட்டம் 3. கோலாட்டம் 4. கரகாட்டம் 5. காவடி ஆட்டம் 6. கும்மி 7. வில்லுப்பாட்டு 8. தெருக் கூத்து 9. பாவைக் கூத்து (பொம்மலாட்டம்) 10. கனியான் ஆட்டம், 11. வர்மம் 12. சிலம்பாட்டம். 13. களரி 14. தேவராட்டம் 15. சக்கையாட்டம் 16. பொய்க்கால் குதிரை ஆட்டம் 17. மயிலாட்டம் 18. உறியடி விளையாட்டு (கண்ணன் விளையாட்டு) 19. தப்பாட்டம் 20. உக்கடிப்பாட்டு 21. இலாவணி 22. கைச்சிலம்பாட்டம் 23. குறவன் குறத்தியாட்டம் 24. துடும்பாட்டம் 25. புலி ஆட்டம் 26. பொம்மைக் கலைகள் 27. மண்பாண்டக் கலை 28. கோலக் கலை

இதுபோன்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலைகள் உள்ளன. இந்தக்கலைகள் வெளியே தெரியாமல் உள்ளன. மேலும் நாடகம், வீதி நாடகம், இசை நாடகம், நாட்டிய நாடகம், பரதநாட்டியம், இசைச் சிற்பம் போன்ற பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

கிராமியக் கலைகள்:-

ஒயிலாட்டம்

கிராமக் கோவில்களில் ஒயிலாட்டம் விழாக்காலங்களில் ஆடப்படுகிறது. இதிகாச புராண வரலாற்றுக் கதைகளே ஒயிலாட்டத்தில் பாடப்படும், கட்டபொம்மன், மதுரைவீரன், வள்ளி, திருமணம் கதைகள் இடம் பெறும். ஒயிலாட்டம் ஆடுபவர் வெள்ளை ஆடை அணிந்து இருப்பர். காலில் சலங்கையும் கட்டியிருப்பர். கையில் ஆளுக்கொரு கைக்குட்டையைப் பிடித்து இருப்பர். நுனியில் பிடித்து அதை அழகாக வீசியபடியே பாடி ஆடுவர்.

கோலாட்டம்

கோலாட்டம் என்பது பெண்களுக்கென்றே உரிய ஆட்டமாகும். இரண்டு கோல்களைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்பி ஆடுகின்ற ஆட்டமே கோலாட்டம் ஆகும். சமுதாயத்தைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும் கோலாட்டப் பாடல்கள் எழுதப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலும் கோலாட்டம் ஆடப்படுகிறது.

கரகாட்டம்

மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் கரகம் எடுப்பது தமிழ் நாடெங்கும் உள்ள வழக்கமாகும். மலர்களைக் கொண்டு அழகான ஒப்பனை செய்யப்பட்ட குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் கரக ஆட்டமாகும். இறைவழி பாட்டுடன் தொடர்பு உடையது இந்த கலை பல்வகை வண்ண மலர்களால் போர்த்தப்பட்டு அழகாகச் செய்யப்பட்டிருக்கும். இந்த கரகாட்டத்தில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக ஆடுவது பல அடுக்குகள் கொண்ட கரகத்தைத் தாங்கி ஆடுவது கரகாட்டத்தின் தனிச்சிறப்பு.

காவடி ஆட்டம்

காவடியாட்டம் சமய உணர்விற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் நிகழ்த்தப்படுகிறது. காவடி, தண்டைக் கொண்டு ஆடுவதால் இவ்வாட்டம் காவடியாட்டம் எனப் பெயர் பெற்றது காவடி எடுத்து முருகக் கடவுளை வழிபடும் நிகழ்ச்சியாகக் காவடி ஆட்டம் நடைபெறுவது தமிழர்கள் மரபாகும். காவடியாட்டம் இறைத் தொடர்புடையது ஆதலால் பல கடுமையான நோன்புகளை மேற்கொண்டு காவடி எடுப்பர். கலைத்திறனும் ஆடல் நுட்பமும் இதில் மிகுதியாக இருக்கும்.

கும்மி

தமிழகமெங்கும் நிகழும் ஆட்டங்களில் கும்மியாட்டம் முக்கிய இடம் வகித்து வருகின்றது. கும்மிக்கென்று தனிமெட்டு உண்டு. ஒருவர் முதலில் பாட, அதனைத் தொடர்ந்து பெண்கள் குழுவாகச் சேர்ந்து பாடுவர்.

வில்லுப்பாட்டு

தமிழகத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைகளில் மிகச் சிறந்தது வில்லுப்பாட்டு. வில்லுப்பாட்டு பிறப்பிடம் குமரி மாவட்டம் வில்லுப்பாட்டில் குறைந்தது ஐந்து பேர் இருப்பர். வில்லுப்பாட்டில் கதைப் பாடல்களைப் பாடிக்காட்டுவார்கள். தலைவர் இருவர் கதையைப் பாட்டாகக் கூறிச் செல்லும்போது விளக்க வேண்டிய இடத்தில் விளக்கி, உரைநடையாக கூறுவர். தெய்வங்களின் வரலாறு. தெய்வ நிலை பெற்ற வீரர்களின் வரலாறு. அரசர்களின் வரலாறு இவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறவே வில்லுப்பாட்டு பயன்பட்டது. விழாக்களில் பாடப்பட வில்லுப்பாட்டு, இன்று இலக்கியம், அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அரசியல் சமுதாயத் தலைவர்களின் வரலாறுகள் வில்லுப்பாட்டில் இடம் பெறுகின்றன. காந்தி மகான் கதையை மறைந்த கலைவாணர் பாமர மக்களிடையே பரப்பினார்.

தெருக்கூத்து

பிறநாட்டுப்புறக் கலைகளைப் போன்றே இதுவும் தெய்வ வழிப்பாட்டோடு தொடர்பு உடையது. திரௌபதி விழாக்களில், மாரியம்மன் விழாக்களில், சிவன், திருமால், கணேசன், ஆகியோருக்கு எடுக்கப்படும் விழாக்களில் தெரு கூத்தானது நிகழ்த்தப்பட்டு வருகிறது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாற்பது கூத்து குழுக்கள் உள்ளன. தெரு கூத்து பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபட்டு நிகழ்த்தப்படுகிறது. தெருகூத்தில வரும் கதாபாத்திரங்களின் பண்புகளை வண்ணங்களும் ஒப்பனையும் வெளிப்படுத்தும், துரியோதனனுக்கு சிவப்பும், துச்சாதனுக்கு மஞ்சள், பீமனுக்கு மேகவண்ணமும், கிருஷ்ணனுக்கு பச்சையும், திரௌபதிக்கு இளஞ்சிவப்பும், அர்ச்சுனனுக்கு நீலமும் தீட்டுவர்.

தெருக்கூத்தில் முதன் முதலாக அரங்கினுள் நுழையும் பாத்திரம் கட்டியக்காரன் ஆவான். அவன் கூத்தின் நடுநாயகமான பாத்திரமாகி, அரசனைப் புகழ்பவனாகவும், தூதுவனாகவும், வேலைக்காரனகவும், கோமாளியாகவும், பொது மக்களுள் ஒருவனாகவும், மாறிமாறிப் பாடுவான். கூத்தைத் துவக்கி, காட்சிகளை விளக்கி கதைகளைத் தெரியப்படுத்தி அறிவுரைகளை தூவி, காலநேரச் சூழல்களை முறைப்படுத்தி வாழ்த்துக் கூறுவதுடன் கூத்தை முடிக்கும் பல வேலைகளையும் செய்கின்றவனாக கட்டியக்காரன் தெருக்கூத்தில் இடம் பெறுகிறான். கூத்தின் இறுதிக்கட்டம் பொது வசனம், முடிவுப்பாட்டு, மங்களம் பாடுவதோடு முடியும். தெரு கூத்தானது இவ்வாறு அனைத்து நாட்டுப்புற கலைகளுக்குச் சிறப்பு செய்வதனை காணலாம்.

பொம்மலாட்டம் (பாவைக்கூத்து)

பொம்மைகள் வைத்து நிகழ்த்துவதால் பாவைக் கூத்து எனப்படுகிறது. பொம்மைகள் தோல் பொம்மைகள், மண் பொம்மைகள் என இருவகைப்படும்.

தமிழ் நாட்டில் இக்கலை தஞ்சை, திருச்சி, இராமநாதபுரம், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. பாவைகளை மரத்தாலும், தோலாலும் செய்து நூல்களைக் கட்டி ஒரு திரைக்குப் பின்னாலிருந்து ஒருவர் ஆடியசைத்துக் கதைகளை விளங்கச் செய்யும் நாட்டுப்புறக் கலைக்கு ''பாவைக் கூத்து'' எனப்பெயர்.

மரப்பாவைகள் நல்ல ஆடைகள் அணிவிக்கப் பெற்றிருக்கும் தரையில் புரளுமாறு ஆடைகள் பெரிதாக இருக்கும் காண்பதற்கு கால்களே இல்லாமல் மனப்பாவனையில் கால்கள் உள்ளது போல் காட்டப்பெறும். கயிறுகள் இன்றி பொம்மைகள் தாமே. இயங்குவதாக மனத்தோற்றத்தை முழுமையாகத் தோற்றுவிக்கிறபோது அது கலையாகிவிடுகிறது.

சிலம்பாட்டம்

சிலம்பம் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிலம்பம் சிறப்புற்று விளங்கினாலும் குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் விளையாடும் சிலம்பாட்டமே சிறப்பானது. இதில் கம்பிகளைக் கொண்டு ஒலியெழுப்பி விளையாடுவர். இக்கலையைப் பயிற்றுவிக்கும் செயலைக் ''களிரிப்பயிற்று'' என்று கூறுவர். புத்த சமயத்துறவிகள் மூலம் இந்தப் போர்க்கலை žனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்றது என்பர் வரலாற்று ஆசிரியர்கள். இக்கலை சிறந்த மாற்றங்களுடன் ஜப்பான் நாட்டில் கராத்தே என்று அழைக்கப்படுகிறது.

பொய்க்கால் குதிரை

புராணக் கதைகளைப் பொய்க்கால் குதிரை ஆட்டத்தின் மூலம் நடித்துக் காட்டுவதுண்டு தஞ்சையை ஆண்ட மராட்டியர்களால் இக்கலை சிறப்புற்றது. ஆணும், பெண்ணும் பங்கேற்கும் இவ்வாட்டத்தில் ஆண் அரசர் வேடந்தாங்கியும், பெண் அரசி வேடந்தாங்கியும் ஆடுவர்.

கேரளா நாட்டு கதகளி பஞ்சாபி நாட்டுக் கதை ஆகியவற்றின் நடனக் கூறுகள் பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

உறியடி விளையாட்டு

உறியடி என்பது ஒரு கிராமியக் கலையாகக் கருதப்படுகிறது. உறியடி விழா என்பதும் கோவில் சார்ந்த கலையாகக் கருதப்படுகிறது. உறி 10 அல்லது 15 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும். உறியை அடிப்பவர் மூன்று அடி நீளமுள்ள கம்புடன் காத்திருப்பர்.

உடுக்கடிப்பாட்டு

மழையின்றித் தவிக்கும் காலத்தில் பல ஊர்களில் உடுக்கடிப்பாட்டு நடத்தப்படும் இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இக்கலை நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது. காத்தவராயன் கதையைப் பாடுவதே பெரு வழக்கமாக உள்ளது.

புலியாட்டம்

தேரோட்டம், சாமி ஊர்வலம் போன்ற திருவிழா நிகழ்ச்சிகளில் இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது. ஒருவர் புலி போன்ற வேடமிட்டு ஆடுவர். மற்றொருவர் வேட்டைக்காரன் போல் வேடமிட்டு ஆடுவர். இவ்விருவரும் சேர்ந்து ஆடும் ஆட்டந்தான் புலி ஆட்டம் என்பர்.நாட்டுப்புற கலைகள்

நன்றிமுனைவர் எஸ்உமயபார்வதி(