Posts

Showing posts from February, 2014

ஆவணப்படம்

ஓவியக்கலை, கட்டடக்கலை, நாடகக்கலை, நாட்டியக்கலை, இசைக்கலை, இலக்கிய க்கலை, போன்றவற்றிற்கு அடுத்ததாக புதிதாகவும் மேலே கண்ட எல்லாக் கலைகளையும் உள்ளடக்கியதாகவும் தோன்றிய நவீனக் கலைதான் திரைப்படக்கலை. எடிசன் கண்டுபிடித்த திரைப்படக் கருவியைக் கொண்டு 1895 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் நாள், பாரிஸில் உள்ள கிரேண்ட் கபே என்ற இடத்தில் லூமியர் சகோதரர்களால் இயக்கப்பட்ட 'புகைவண்டியின் வருகை' என்ற படம் காட்டப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னையில் மத்திய தலைமை புகைவண்டி நிலையம் அருகில் உள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில் எட்வர்ட்ஸ் என்ற ஆங்கிலேயரால் திரையிடப்பட்டது. 1916 ஆம் ஆண்டு நடராஜ முதலியார் என்பவர் 'கேசவதம்' என்ற தென்னிந்தியாவின் முதல் மௌனப்படத்தை எடுத்து வெளியிட்டார். 1916 முதல் 1932 வரை தென்னிந்தியாவில் 123 மௌனப்படங்கள் தயாரிக்கப்பட்டதாக தியோடர் பாஸ்கரன் தெரிவிக்கிறார். 1931 ஆம் ஆண்டு தமிழில் முதல் பேசும் படமாக 'காளிதாஸ்' வெளிவந்தது. தஞ்சையைச் சேர்ந்த மருதப்ப மூப்பனார் என்பவர் சென்னை விமான நிலையத்தில் விமானம் வந்திறங்குவது, மற