தமிழக நாட்டுப்புற கலைகள்
ஒரு நாட்டின் கலை மற்றும் கலாச்சாரம் அச்சமூகத்தினைப் பிரதிபலிக்கும் சிறந்த கருவியாகும் . கலை என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றித் தகவல் ஊடகமாகவும் , கலாச்சாரப் பாலமாகவும் திகழ்கின்றது . கலை என்பது மன உணர்வுகளின் வெளிப்பாடு . குறிப்பாக நாட்டுப்புறக் கலைகள் நமது மண்ணோடு , நம்மோடு தொடர்புடையவை . நமது பாரம்பரியத்தையும் அடி ஆழத்து வேர்களையும் பிரதிபலிப்பவை . கலை , சமூக வளர்ச்சிக்கும் , மன எழுச்சிக்கும் சிறந்த கருவி . பதிவு நமது முன்னோர்களின் நம்பிக்கைகள் , எண்ணங்கள் , சிந்தனைகள் , பழக்க வழக்கங்கள் , ஆகியவற்றை நாட்டுப்புறக் கலைகள் மூலம் அறியமுடிகிறது . இக்கலைகளே சமுதாயத்தின் ஆவணமாகத் திகழ்கின்றன . இக்கிராமியக் கலைகளே , தகவல் பரப்பும் ஊடகமாகவும் பழக்க வழக்கப் பண்பாட்டுப் பெட்டகமாகவும் திகழ்ந்துள்ளன . இன்று தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியான தகவல் தொடர்பிற்கும் பொழுது போக்கிற்கும் பல்வேறு ஊடகங்கள் உருவாகி வருகின்றன . இம்மாறுதல் இயற்கையானதே . நமது இந்தியக் கிராமங்கள் ஒவ்வொன்றும் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு மேல
Comments
Post a Comment