https://www.youtube.com/watch?v=kdgc3Jlb1GA http://www.vikatan.com/news/spirituality/71459-samanar-statues-in-dilapidated-state.html கீற்று தளம் கலை’ என்பது அளவும் பொருத்தமும் தன்னுள் அடக்கி நிற்பது; அதே நேரத்தில் உள்ளத்திற்கு உவகை ஊட்டுவது; உள்ளத்தைத் தன்பால் ஈர்ப்பது, மனிதனது உள்ளத்தைத் தன் வயமாக்கி, நிரம்பி, அவ்வளவோடு நில்லாமல் வெளிப்படும் ஆற்றலே ‘கலை’ என்பது என்று மா. இராச மாணிக்கனார் கூறுகிறார். கலையாற்றல் உள்ளத்தை ஈர்க்கும் காவியமாக வெளியிடலாம், கண்ணைக் கவரும் ஓவியமாக வெளிப்படலாம். சிற்பமாக உருக் கொள்ளலாம், கண்ணையும் கருத்தையும் தன்பால் ஈர்க்கும் அழகிய கட்டமாக வெளிப்படலாம். மனிதனின் ஒவ்வொரு அசைவும் ஒவ்வோர் கலையாக உருவெடுக்கிறது. அதன் விளைவாக மாந்தரின் வாழ்வில் பல வகையான கலைகள் வளர்ந்தன. அவ்வாறு வளர்ந்த கலைகளின் எண்ணிக்கை அறுபத்து நான்கு என மணிமேகலை கூறுகிறது. மனிதனுடைய மனத்தில் உணர்ச்சியை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக் கலைகளுக்கு உண்டு. அந்த அழகுக் கலைகள் ஐந்து வகைப்படும் என்கிறார் மயிலை. சீனி. வேங்கடசாமி. அவை கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்